முஸ்லிம்களில் மிகவும் சிறப்புக்குறியவரும், உயர் அந்தஸ்த்தையும் பெற்றவர் யார் என்பதை நபியவர்கள் இங்கு குறிப்பிடுகிறார்கள். அவர் யாரென்றால் அல்குர்ஆன் ஓதி மனனம் செய்து அழகிய முறையில் தர்த்தீலாக ஓதி, அதனை விளங்கி தானும் அமல் செய்வதுடன் அல்குர்ஆனிய கலைகளை பிறருக்கும் கற்றுக் கொடுப்பவராவார்.