அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஒரு நன்மை உண்டு எனவும், அது அதே போன்று பத்து மடங்காக பன்மடங்காக்கப்படும் எனவும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். நபியவர்கள் இதனை பின்வருமாறு தெளிவுபடுத்துகிறார்கள். அதாவது 'நான் அலிப் லாம் மீம்' என்பதை ஓரு ஹர்ப் -எழுத்து- எனக் கூறாமாட்டேன். மாறாக அலிப் ஓர் எழுத்து, லாம் ஓர் எழுத்து, மீம் ஓர் எழுத்து, ஆகவே இவை ஒவ்வொன்றிற்கும் ஒரு நன்மை வீதம் மூன்று நன்மைகள் கிடைப்பதுடன் இதன் பத்து மடங்கு முப்பது ஆகும்.