அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓரெழுத்தை ஓதும் ஒரு முஸ்லிமுக்கு அந்த ஓரெழுத்துக்குக் கூலியாக பத்து நன்மைகள் வழங்கப்படுவதாக நபியவர்களைத் தொட்டும் இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கின்றார்கள். "الم என்பது ஓரெழுத்து எனக் கூற மாட்டேன்" என்றால் அந்த மூன்றெழுத்துக்களின் கூட்டு ஓரெழுத்தெனக் கூற மாட்டேன். மாறாக அதில் ا ஓரெழுத்து, ل ஓரெழுத்து, م ஓரெழுத்தாகும் என்பதே அர்த்தமாகும். எனவே அதனை ஓதியவருக்கு முப்பது நன்மைகள் வழங்கப்படுகின்றன. இது பாரிய ஓர் அருட்கொடையாகவும், பெரிய கூலியாகவும் உள்ளது. எனவே அல்குர்ஆன் ஓதுவதை அதிகப்படுத்துவது அவசியமாகும்.