இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், அல்லாஹ் அநியாயம் இழைப்பதை தன்மீது ஹராமாக்கிக் கொண்டதாகவும், அதனை தனது படைப்பினங்களுக்கு மத்தியிலும் ஹராமாக்கியுள்ளதாகவும் தெளிவுபடுத்துகிறார்கள். ஆகவே ஒருவர் மற்றவருக்கு அநியாயம் இழைக்க வேண்டாம். அல்லாஹ்வின் வழிகாட்டலையும் அதற்கான வாய்ப்பையும் பெறாத அடியார்கள் அனைவரும் சத்தியப்பாதையைவிட்டும் தடம்புரண்டவர்களாக உள்ளனர். யார் அல்லாஹ்விடம் நேரான வழியை வேண்டுகிறானோ அவனுக்கு அல்லாஹ் நேரான பாதையை காட்டி அதற்கான வாய்ப்பையும் அளிக்கிறான். அடியார்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் அல்லாஹ்விடம் தேவையுடயவர் களாக உள்ளனர் . எனவே யார் அல்லஹ்விடம் தனது தேவையை நிறைவேற்றித்தருமாறு கோருகிறனோ அவனின் தேவையை நிறைவேற்றி அவனை தன்னிறைவுள்ளவனாக மாற்றுகிறான். அவர்கள் இரவிலும் பகலிலும் பாவம் செய்கிறார்கள். அடியான் தனது இரட்சகனான அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் அதனை அல்லாஹ் மறைத்து மன்னித்து விடுகிறான். அடியார்கள் அனைவரும் (தமது சொல், செயல்களால்) அல்லாஹ்வுக்கு நலவோ, கெடுதியோ செய்ய அவர்களால் ஒரு போதும் முடியாது. அவர்கள் அனைவரும் அல்லாஹ்வுக்கு மிக அஞ்சிய ஒருவருடைய உள்ளத்தின் பெயரில் இருந்தாலும், அவர்களுடைய இறையச்சம் அல்லாஹ்வின் ஆட்சியதிகாரத்தில் சிறிதளவையேனும் அதிகரிக்க செய்வதில்லை. அவர்கள் அனைவரும் மிகமோசமான பாவியுடைய உள்ளத்தை கொண்டிருந்தாலும் அவர்களுடைய பாவங்கள் அவனது ஆட்சியதிகாரத்தில் சிறிதளவையேனும் குறைக்கப் போவதுமில்லை. ஏனெனில் அவர்கள் அனைவரும் எல்லா நிலமைகளிலும், காலங்களிலும், இடங்களிலும் அவன்பால் தேவையுடைய வறியவர்களாக உள்ளனர். அல்லாஹ்வே எவ்விதத் தேவையுமற்றவனாவான்-அவன் தூய்மையானவன்- ஜின் மற்றும் மனித இனம் அனைவரும் அவர்களில் முன்பிருந்தோரும் தற்போது இருப்போரும் ஓரிடத்தில் ஒன்று கூடி, ஒவ்வொருவரும் தத்தமது தேவைகளை அல்லாஹ்விடம் கேட்டு, அவர்கள் கேட்ட அனைத்தையும் அவன் கொடுத்தாலும் அவனிடத்தில உள்ளவற்றில் சிறிதளவேனும் குறைய மாட்டாது. கடலுக்குள் இடப்பட்டு வெளியே எடுத்த ஊசியைப் போல், இதன் மூலம் கடலில் எதுவும் குறைந்து விடுவதில்லை. இதுபோல்தான் அல்லாஹ் தன்னிறைவானவன், எதுவும் தேவையற்றவன். அல்லாஹ் அடியார்களின் அனைத்து செயல்களையும் பாதுகாத்து, அவர்களது நன்மை, தீமைகளைக் கணக்கிட்டு வைக்கின்றான். பின் மறுமையில் அதனடிப்படையில் கூலி வழங்குகிறான். தனது செயல்களுக்குரிய கூலியை நன்மையாக கண்டுகொண்டவர் (சுவனத்தைப் பெற்றுக் கொண்டவர்) அல்லாஹ் அவனுக்கு வழிப்படும் நற்பாக்கியத்தை அளித்தமைக்காக அவனைப் புகழட்டும், இவையல்லாத தண்டனைகளைக் கூலியாப் பெற்றவர் தன்னை நஷ்டத்தின் பால் தூண்டிய தனது ஆன்மாவையே நொந்து கொள்ளட்டும்.