நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிக்குள் நுழையும் போது மேற் குறிப்பிட்ட திக்ரை கூறக் கூடியவர்களாக இருந்தார்கள் அதன் விளக்கம் பின்வருமாறு: (أعوذ بالله العظيم) 'அஊது பில்லாஹில் அழீம்' என்றால் அல்லாஹ்வைக் கொண்டும் அவனின் பண்புகளைக் கொண்டும் நான் புகழிடம் தேடி பாதுகப்பும் கோருகிறேன். (وبوجهه الكريم) வபிவஜ்ஹிஹி கரீம் என்றால் : பெரும் கொடையாளானாகிய அவனின் திருமுகத்தைக் கொண்டும் என்று பொருளாகும். (وسلطانه) வஸுல்தானிஹி என்றால் (அவனின் அதிகராம்) அதாவது அவனின் மேலான்மை மற்றும் வல்லமை மற்றும் அதிகாரம் அவன் விரும்பும் எந்தப்படைப்பின் மீதும் இருக்கும் என்பதாகும். (القديم) (அல் கதீம்) என்பது நித்தியமான முடிவே இல்லாத தொன்று தொட்டே உள்ள என்று பொருளாகும். (من الشيطان الرجيم) 'மினஷ் ஷைத்தானிர் ரஜீம்' என்பது அல்லாஹ்வின் கருணையிலிருந்து விரட்டப்பட்டு தூரமாக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து என்பதாகும். இதன் கருத்து : யா அல்லாஹ் : ஷைத்தானின் தீய ஊசாலட்டத்திலிருந்தும், அவனின் தூண்டுதல் களிலிருந்தும்,அவனுடைய அடிச்சுவடு களிலிருந்தும், அவனுடைய தீய எண்ணங்களிலிருந்தும், அவனுடைய வழிகேட்டிலிருந்தும், தீய விஷயங்களை எனக்குக் கவர்ச்சிகரமானதாகக் காட்டுவதிலிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக.அவனே வழிகேட்டிற்கும் அறியாமைக்கும் தூண்டுபவனும் ஆவான். அப்துல்லாஹ்; இப்னு அம்ர் (ரழி) அவர்களிடம்; ஒருவர், 'நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இதை மாத்திரமா சொன்னார்கள்?' என்று கேட்டார். என்றார். அதற்கு அவர், 'ஆம்' என் கூறினார். ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழையும்போது இந்த துஆவை ஓதினால், இந்த துஆவை ஓதிக் கொண்டே பள்ளிவாசலுக்குள் நுழைந்த இந்த மனிதர் என்னிடமிருந்து இரவும் பகலும் பாதுகாப்புப் பெற்றுள்ளார் என்று ஷைத்தான் கூறுவான்.