சுவர்க்கத்தை அடையச் செய்யும் மிகப் பெரும் காரணிகள் -வழிகள் இரண்டு என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெளிவு படுத்துகிறார்கள். அந்த இரண்டு வழிகளும் பின்வருமாறு: ஒன்று அல்லாஹ்வின் மீதான அச்சம், மற்றையது நற்பண்புகள். இறையச்சம் என்பது இறைகட்டளைகளை கடைப்பிடித்து ஒழுகுவதன் மூலமும், அவன் தடுத்தவற்றை தவிர்ந்திருப்பதன் மூலமும் உமக்கும் அல்லாஹ்வுடைய தன்டனைக்கும் மத்தியில் ஒரு திறையை ஏற்படுத்திக் கொள்வதாகும். நற்குணம் என்பது முகமலர்ச்சியும், பிறருக்கு நன்மை செய்வதும், தொந்தரவு செய்யாதிருப்பதுமாகும். நரகத்தினுள் பிரவேசிக்கச் செய்யும் மிகப் பெரும் காரணிகள் -வழிகள் இரண்டாகும், அவை : நாவும் மறையுறுப்புமாகும். நாவின் விபரீதங்களுள் பொய் சொல்வது, புறம் பேசுதல், கோள் சொல்லித் திரிதல் போன்ற பாவங்கள் இடம்பெறுகின்றன. மறையுறுப்பின் விபரீதங்களுள் விபச்சாரம், ஓரினச்சேர்க்கை போன்ற பல பாவங்கள் இடம் பெறுகின்றன.