நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூத்தர்தா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை பாதுகாக்கிறாரோ அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில்(நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கிறான்'.
சரியானது - இமாம்களான திர்மிதி மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
யார் தனது சகோதர முஸ்லிமின் மானத்தை அவர் இல்லாத வேளை அவனை கண்டிப்பது அல்லது அவனுக்கு மோசமான வார்த்தையினால் அவனை ஏசுவது போன்ற விடயங்களை விட்டும் பாதுகாக்கிறானோ அவனை அல்லாஹ் மறுமையில் நரக வேதனைவிட்டும் அவனை பாதுகாக்கிறான்.
ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்
முஸ்லிம்களின் மானம் பற்றி பேசுவது தடுக்கப்பட்டிருத்தல்.
செயலுக்கேற்ற கூலி கிடைக்கும், தனது சகோதரருடைய மானத்தைக் காற்றவரை அல்லாஹ் நரகிலிருந்து விடுதலை செய்து பாதுகாக்கிறான்.
இஸ்லாம் சகோதரத்துவத்தினதும் முஸ்லிம்களுக்கிடையில் பரஸ்பர உதவி ஒத்தாசை புரிந்து கொள்வதினதும் மார்க்கமாகும்.