இந்த ஹதீஸில், முழுமையான ஈமான் உள்ள ஒருவரிடம் காணப்படக்கூடாத சில விடயங்களைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஒரு உண்மையான முஃமின் மக்களின் பரம்பரையை விமர்சிப்பவராகவோ, அதிகமாக சபிப்பவராகவோ, வார்த்தையிலோ செயலிலோ வெட்கமற்ற செயல்களைச் செய்பவராகவோ இருக்க மாட்டார்.