இந்த ஹதீஸில் நபியவர்கள் இஸ்லாத்திற்கு முன் இருந்த குறைஷித்தலைவர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு ஜுத்ஆன் பற்றி குறிப்பிடுகிறார்கள். அவரிடம், உறவுகளை சேர்ந்து நடந்து, உபகாரம் புரிதல் மற்றும் ஏழைகளுக்கு உணவளித்தல் போன்ற இஸ்லாம் செய்ய வேண்டும் என வலியுறுத்திக் குறிப்பிட்டிருக்கும் சிறப்பான விடயங்களில் சில காணப்பட்டன. என்றாலும் அவைகள் ஒருபோதும் மறுமையில் அவருக்கு எவ்விதப்பயனையும் தராது. அவர் அல்லாஹ்வை நிராகரித்தமையும், 'எனது இரட்சகனே எனக்கு எனது குற்றத்தை மறுமை நாளில் மன்னித்தருள்வாயாக' என்று ஒரு நாளாவாது அவர் கூறாது இருந்தமையும் இதற்கான காரணங்களாகும்.