(ஒரு காலம் வரும் அக்காலத்தில்) ஆட்சித் தலைவர்களினால் சில பிரதிநிதிகள் எமக்கு நியமிக்கப்படுவார்கள், அவர்களிடம் மார்க்கத்திற்கு உடன்பட்ட சில நன்மைகளையும் காண்போம், ஷரீஆவுக்கு முரண்பட்ட சில பாவங்களையும் காண்டு அவற்றை நாம் மறுக்கும் நிலையில் இருப்போம் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். அதனைத் தடுக்க சக்தியற்று, உள்ளத்தால் வெறுத்தவர் பாவத்திலிருந்தும் நயவஞ்சகத்தனத்திலிருந்தும் தப்பிக் கொண்டவராவார். கையினாலோ, நாவினாலோ தடுக்க சக்தி பெற்று, தடுத்தவரும் பாவத்திலிருந்து அதற்கு துணையாக இருப்பதிலிருந்தும் தப்பிவிட்டார். இருப்பினும் அவர்களது செயலைப் பார்த்து திருப்தியடைந்து, துணை போனவர்கள் அவர்களைப் போன்றே அழிந்து போவார்கள். பின் தோழர்கள் அவர்களை எதிர்த்து நாம் போராடவா என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வினவினார்கள். அதற்கு நபியவர்கள் அவர்கள் தொழுகையை நிலைநாட்டும் வரை போர் தொடுக்க வேண்டாமெனத் தடுத்தார்கள்.