நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கியாம நாள் நெருங்கும் போது நிகழும் சில அடையாளங்கள் குறித்து தெளிவு படுத்துகிறார்கள். அறிஞர்களின் மரணம் காரணமாக ஷரீஆ பற்றிய அறிவு உயர்த்தப்படுவது அதில் ஒன்றாகும். இதன் விளைவாக அறியாமை மேலோங்கி எல்லா இடத்திலும் அறியாமை பரவிவிடும்.விபச்சாரமும் மானக்கேடான விடயங்களும் சர்வசாதாரணமாக பரவும். மது அதுருந்துதல் அதிகரித்துவிடும். ஒரு ஆண் ஜம்பது பெண்களின் விவகாரங்களை நிர்வகித்து அவர்களின் நலன்களை பொருப்பேற்று நடாத்தும் அளவுக்கு, பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து ஆண்களின் எண்ணிக்கை குறைந்து விடும்.