இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் மண்ணறையை கடந்து செல்கையில் தான் அவன் இருக்கும் இடத்தில் இருந்திருக்க வேண்டுமே என்று நினைக்கும் வரையில் மறுமை ஏற்பட மாட்டாது. அசத்தியமும் அசத்திய வாதிகளும் மிகைத்ததின் விளைவாக மரர்க்கம் தன்னை விட்டு சென்றுவிடும் என்ற பயமும், குழப்பங்கள் பாவகாரியங்கள் மானக்கேடான விடயங்கள் அதிகரித்து மிகைத்திருப்பதுமே இவ்வாறு நினைப்பதற்கு காரணம் என குறிப்பிடுகிறார்கள்.