இங்கு நபி (ஸல்) அவர்கள், ஒரு ஜனாஸா கட்டிலில் வைக்கப்பட்டு, அதை மனிதர்கள் தமது தோல்களில் சுமந்து விட்டால், அது ஸாலிஹான (நல்ல) ஜனாஸாவாக இருந்தால், தான் தனது முன்னால் காணும் இன்பங்களை நோக்கி, தன்னை முற்படுத்துங்கள் என்று கூறும். அது நல்லதற்றதாக இருந்தால், தனக்கு முன்னால் காணும் வேதனைகள் காரணமாக, மோசமான ஒரு சப்தத்தில், 'அதற்கேற்பட்ட கேடே! அதை எங்கு கொண்டு செல்கின்றார்கள்?' என்று கேட்கும். அதன் சப்தத்தை மனிதர்களைத் தவிர அனைத்துமே கேட்கும். அதை மனிதன் கேட்டுவிட்டால், அந்த சப்தத்தின் அகோரத்தின் காரணமாக மூச்சையடைந்து விடுவான்.