ஆஇஷா மற்றும் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹும் ஆகிய இருவரும் எமக்கு ஓரு செய்தியை தெரிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு மரணவேளை நெருங்கிய போது தனது முகத்தில் ஒரு துணித்துண்டை முகத்தில் போடுவதும், மூச்செடுப்பது சிரமமாகும் போது அதனை அகற்றுபவராகவும் இருந்தார்கள். அந்த நெருக்கடியான நேரத்தில் : யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக, அவனின் அருளை விட்டும் தூரப்படுத்துவானாக எனக் கூறினார்கள். ஏனெனில் அவர்கள் தமது நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். இந்த விடயத்தின் பாரதூரத்தின் காரணமாக அவர்கள் இதனை இவ்வாறான நெருக்கடியான நேரத்தில் கண்டித்துள்ள்ளார்கள். யூத, கிறிஸ்தவர்கள் வீழ்ந்த அதே பாவத்தில் தமது சமூகமும் வீழ்ந்துவிடாமலிருக்கவே நபியவர்கள் இவ்வாறு எச்சரித்துள்ளார்கள், அது மாத்திரமின்றி இந்த செயலானது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் மாபாதகச் செயலுக்கும் வழிவகுக்கும் ஒரு மிகப்பெரும் பாவமாகும்.