பெரும்பாவங்களாகக் கணிக்கப்படும் சில பாவங்களை நபியவர்கள் இங்கு கூறியுள்ளார்கள். அவை 1. அல்லாஹ்வின் பரிபாளனக் கோட்பாடு, இறைமையில் அவனுக்கு நிகராக இன்னொருவரை வைத்தல், இதுதான் மிகப்பெரிய பாவமென்பதால் இதனைக் கொண்டே ஆரம்பித்துள்ளார்கள். 2. அல்லாஹ்வின் மீதான ஆதரவைத் துண்டித்தல், ஏனெனில் இது அல்லாஹ்வைப் பற்றி தவறான எண்ணம் வைத்தல் மற்றும் அவனது அருளின் விசாலத்தை அறியாதிருத்தலின் வெளிப்பாடாகும். 3. அடியானுக்கு அருள்களைக் கொடுத்து, துஷ்பிரயோகம் செய்ய விட்டுவிட்டுஅலட்சியமாக இருக்கும் போது அவனை அல்லாஹ் விட்டுப் பிடிப்பான் என்பதையிட்டு அச்சமற்றிருத்தல். மேற்கண்டவை மாத்திரம்தான் பெரும்பாவங்களென வரையறுத்தல் இந்நபிமொழியின் நோக்கமல்ல. ஏனெனில் பெரும்பாவங்கள் அதிகமாக உள்ளன, அவற்றில் மிக முக்கியமானதை விளக்குவதே இங்கு நோக்கமாகும்.