நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது சில பயணங்களின் போது மக்கள் எல்லோரும் தங்களின் கூடாரங்களிலும், தங்குமிடங்களிலும் தூங்கிக் கொண்டிருக்கும் வேளை கண்திருஷ்டிக்காகவும், ஆபத்துக்களிலிருந்து காப்பதற்காகவும் ஒட்டகங்களின் கழுத்துக்களில் கட்டப்பட்டுள்ள மணி, அல்லது காலணி போன்றவற்றை கத்தரித்து நீக்கிவிடுமாறு ஒரு நபரை அனுப்பி வைத்தார்கள். காரணம் இவ்வாறனவை அவர்களுக்கு ஏற்படவுள்ள எந்தத் தீங்யையும் தடுத்திட மாட்டாது. அத்துடன், நன்மையோ கெடுதியோ அல்லாஹ் ஒருவனின் கைவசம் மாத்திரமே உள்ளது, அவனுக்கு இணையேதும் கிடையாது.