நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகை முடிந்ததும் 'அஸ்தஃபிருல்லாஹ்' அஸ்தஃபிருல்லாஹ்' அஸ்தஃபிருல்லாஹ்' என மூன்று தடவைகள் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள். பின்னர் அவர்கள் தனது இரட்சகனை 'அல்லாஹம்ம அன்தஸ் ஸலாமு, வமின்கஸ் ஸலாமு தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராமி' என்ற கூற்றினால் மகத்துவப்படுத்தினார்கள். இங்கு அஸ்ஸலாம் என்பது அல்லாஹ் தனது பண்புகளில் பரிபூரண சாந்தியளிப்பவன், எல்லாவகையான குறைகளை விட்டும் தூய்மையானவன் என்பதாகும். அவனிடமிருந்தே இம்மை மறுமையின் தீங்குகளைவிட்டும் ஈடேற்றத்தை கோர வேண்டும். வேறு யாரிடமும் அதனை தேடக்கூடாது. அவன் தூயவன் அவனிடமே இம்மை மறுமையின் நலன்கள் யாவும் பெருகிக்கிடக்கிறது. அவனே மகத்துவம் மற்றும் உபகாரம் போன்ற பண்புகளின் சொந்தக்காரனாவான்.