ஒரு முஸ்லிமுக்கு மிகவும் தேவைப்படுகின்ற, இம்மை மறுமை நலன்களை உள்ளடக்கிய ஐந்து மகத்தான பிரார்தனைகள் உள்ளடங்கிய ஒரு துஆவை தனது தொழுகையில், இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில் ஓதக் கூடியவர்களாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் திகழ்ந்தார்கள். அதில் நபியவர்கள் பாவங்களுக்கு மன்னிப்புக் கோரி, அவற்றை மறைத்து, அழித்து விடுமாறும், அருளை நிறைவாகத் தருமாறும், மார்க்கத்தில் சந்தேகங்ள் மற்றும் மனோ இச்சைகளைப் பின்பற்றுவதை விட்டும், உடலில் நோய் நொடிகளை விட்டும், ஆரோக்கியத்தையும், ஈடேற்றத்தையும் தருமாறும் வேண்டுகிறார்கள். அத்துடன் அல்லாஹ்விடம் சத்தியத்தியத்தைப் பின்பற்றி வாழ்வதற்கும், அதில் நிலைத்திருக்கவும், மேலும் ஈமான், அறிவு, நற்செயல் ஆகிய ரிஸ்கையும் தூய்மையும் ஹலாலும் நிறைந்த செல்வமெனும் ரிஸ்கையும் தருமாறு வேண்டுகிறார்கள்.