நுஃமான் இப்னு பஷீர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது, தனது தாயாராகிய அம்ரா பின்து ரவாஹா அவர்கள், தனது தந்தையிடம் அவரது மகனுக்காக அவரது சொத்திலிருந்து ஒரு அன்பளிப்பைத் தருமாறு வேண்டிக் கொண்டதாகவும், பஷீர் அவர்கள் விருப்பமின்றி ஒரு வருடம் பிற்படுத்திக் கொண்டிருந்து விட்டு, பின்பு அவளது வேண்டுகோளுக்கு இணங்க அவரது மகன் நுஃமானுக்கு ஏதாவது கொடுக்கலாம் எனத் தோன்றியது. அப்போது தாயார், என்னுடைய மகனுக்கு நீங்கள் வழங்கும் அன்பளிப்பக்காக நபியவர்களைச் சாட்சியாக வைக்கும் வரை நான் பொருந்திக் கொள்ள மாட்டேன் என்று கூறினார். உடனே, எனது தந்தை, சிறுவனாக இருந்த எனது கையைப் பிடித்து நபியவர்களிடம் அழைத்துச் சென்று, 'அல்லாஹ்வின் தூதரே! இவருடைய தாயார் பின்து ரவாஹா அவர்களுக்கு, நான் இவருக்கு வழங்கியுள்ள அன்பளிப்புக்காக உங்களை சாட்சியாளராக வைப்பது விருப்பமாக உள்ளது.' என்று கூறினார்கள். அப்போது நபியவர்கள், 'பஷீரே! இவரல்லாத வேறு பிள்ளைகள் உமக்கு உண்டா?' எனக் கேட்டார்கள். அதற்கவர், 'ஆம்' என்று கூறினார். அப்போது நபியவர்கள், 'அவர்கள் அனைவருக்கும் இதுபோன்று வழங்கியுள்ளீர்களா?' எனக் கேட்க, அவர், 'இல்லை' என்றார். அப்போது நபியவர்கள், 'அப்படியாயின் என்னைச் சாட்சியாளராக வைக்காதீர்கள். நான் அநீதத்திற்கு சாட்சியாக இருக்கமாட்டேன்' என்று கூறினார்கள். முஸ்லிமின் அறிவிப்பில் அவரைக் கண்டிக்கும் விதமாக, 'இதற்கு வேறொரவரைச் சாட்சியாக வைத்துக் கொள்ளுங்கள்' என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.