வெள்ளைப் பூண்டு அல்லது வெங்காயம் போன்றவற்றைச் சாப்பிட்டவர்கள் பள்ளிவாசலுக்கு வருவதை நபியவர்கள் தடுக்கின்றார்கள். ஏனெனில், அவர்கள் தமது துர்வாடையினால், ஜமாஅத் தொழுகைக்கு வரும் சகோதரர்களுக்குத் தொல்லையை ஏற்படுத்துகின்றார்கள். இது (தடையைக் காட்டாத) தூய்மைப்படுத்தல் சார்ந்த அமைப்பில், பள்ளிவாசலுக்கு வருவதைத் தான் தடுக்கின்றதே ஒழிய, அவற்றைச் சாப்பிடுவதை அல்ல. ஏனெனில். அவை அனுமதிக்கப்பட்ட உணவுகளாகும். காய்கறிகள் உள்ள ஒரு சட்டி நபியவர்களிடம் கொண்டுவரப்பட்டது. அதில் ஒரு துர்வாடையை நபியவர்கள் உணர்ந்த போது, அதில் இருப்பவை பற்றி நபியவர்களுக்குக் கூறப்பட்டது. உடனே நபியவர்கள் சாப்பிடாமல் தவிர்ந்து கொண்டார்கள். பின்பு நபியவர்கள் தனது ஒரு நபித்தோழர் அதனைச் சாப்பிடுவதற்காக, அவரிடம் கொடுத்தார்கள். அவரும் நபியவர்களைப் பின்பற்றி, அதைச் சாப்பிட வெறுத்தார். அதை நபியவர்கள் கண்டவுடன், 'நீங்கள் சாப்பிடுங்கள். நான் மலக்குகளுடன் உரையாடுகின்றேன்.' என்று கூறினார்கள். துர்வாடைகளால் மனிதர்கள் தொந்தரவுக்குள்ளாவது போன்று, மலக்குகளும் உள்ளாவதாக நபியவர்கள் இங்கு அறிவிக்கின்றார்கள்.