நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய தோழர்களில் சிலர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து, 'தங்களது உள்ளத்தில் எழுகின்ற, அருவருக்கத்தக்கதும்,பிறர் வெறுத்து புறக்கணிக்கத்தக்கதும், அவற்றைப் பேசுவது என்பதே மிகப்பெரிய பாவம் என்ற நிலையில் இருக்கும் விடயங்கள் சம்பந்தமாக விசாரித்தார்கள். அதற்கு நபியவர்கள் நீங்கள் உங்கள் உள்ளத்தில் காணும் இவ்வாறான எண்ணங்கள் ஈமானின் அப்பளுக்கற்ற தன்மைக்கு ஆதாரமாகவும். ஷைத்தான் உங்கள் உள்ளத்தில் எற்படுத்துகின்றவற்றை தடுக்கவும், அவற்றை பேசுவதை நீங்கள் வெறுக்கவும், அவற்றை மிகப்பெரியதொரு விடயமாக கருதவும் உங்களைத் தூண்டுகின்ற ஆழமான ஈமானிய உறுதியின் வெளிப்பாடாகவும் இது அமைந்துள்ளதுடன் ஷைத்தான் உங்களுடைய உள்ளங்களை ஆட்கொள்ளவில்லை என்பதை காட்டுகிறது. மாறாக ஷைத்தான் ஆட்கொண்ட உள்ளத்தைப் பொருத்தவரை இந்நிலை காணப்படமாட்டாது எனவும் விளக்கமளித்தார்கள்.