அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தனக்கு அதிகம் இச்சை நீர் வெளிப்படுவதாக அறிவிக்கிறார்கள். மத்யு' என்பது வெள்ளை நிறத்திலான பசைபோன்ற மென்மையான நீராகும். இது ஆண் குறியிலிருந்து இச்சை மேலீட்டால் அல்லது குடும்பவாழ்வில் ஈடுபட முன்னர் வெளிப்படும். அது வெளியேறுகையில் என்ன செய்யவேண்டும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை . நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மகளான பாத்திமாவின் கணவர் என்பதால் இது குறித்து நபியவர்களிடம் கேட்க வெட்கப்பட்டார். எனவே இது குறித்து அறிந்து கொள்ள, நபியவர்களிடம் அல்மிக்தாத் இப்னுல் அஸ்வத் அவர்களை அனுப்பி வைத்தார். அவர் நபியவர்களிடம் இது விடயமாக கேட்டபோது: நபியவர்கள் தனது ஆண்குறியை நன்றாக கழுவிவிட்டு பின் வுழு செய்யுங்கள் என பதிலளில்தார்கள்.