அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: மக்களிடம் இரு பண்புகள் உள்ளன. அவை அவர்களிடம் இறைநிராகரிப்பை ஏற்படுத்திவிடும் : வம்சத்தில் குறைகூறுவது, மரணித்த ஒருவருக்காக ஒப்பாரி வைத்து அழுவது. சரியானது - இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
explain-icon

விளக்கம்

இங்கு நபியவர்கள், ஜாஹிலிய்யாக் கால பண்புகளாகவும், நிராகரிப்பாளர்களின் செயற்களாகவும் உள்ள, மக்களிடம் காணப்படும் இரு பண்புகளைப் பற்றிக் கூறுகின்றார்கள். அவ்விரண்டுமாவன: முதலாவது, மக்களது வம்சத்தில் குறைகூறி, அவற்றைக் தரம்குறைத்துப் பேசி, அவர்களைத் தாழ்த்திப் பெருமையடித்தல். இரண்டாவது, சோதனைகளின் போது, இறைவிதியில் வெறுப்பைக் காட்டும் விதமாக சப்தத்தை உயர்த்துதல், அல்லது பொறுமையிழப்பின் உச்சகட்டமாக, சட்டைகளைக் கிழித்துக்கொள்ளல்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • பணிவாக இருக்கவும், மக்களிடம் பெருமையடிக்காமல் இருக்கவும் ஆர்வமூட்டல்.
  • சோதனைகளின் போது ஆத்திரமடையாமல், பொறுமையாக இருப்பது கட்டாயமாகும்.
  • இவை சிறிய இறைநிராகரிப்பில் உள்ளவையாகும். (இவ்வாறான) இறைநிராகரிப்பின் ஏதாவது ஒரு கிளை யாரிடம் உள்ளதோ, அவரிடம் பெரிய நிராகரிப்பு ஏற்படும் வரை, அவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறுமளவு நிராகரிப்பாளராக மாறிவிடமாட்டார்.
  • வம்சங்களில் குறைகூறுதல் போன்ற, முஸ்லிம்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் எல்லா அம்சங்களையும் இஸ்லாம் தடுத்துள்ளது.
explain-icon

மேலதிக விபரங்களுக்கு