இங்கு நபியவர்கள், ஜாஹிலிய்யாக் கால பண்புகளாகவும், நிராகரிப்பாளர்களின் செயற்களாகவும் உள்ள, மக்களிடம் காணப்படும் இரு பண்புகளைப் பற்றிக் கூறுகின்றார்கள். அவ்விரண்டுமாவன: முதலாவது, மக்களது வம்சத்தில் குறைகூறி, அவற்றைக் தரம்குறைத்துப் பேசி, அவர்களைத் தாழ்த்திப் பெருமையடித்தல். இரண்டாவது, சோதனைகளின் போது, இறைவிதியில் வெறுப்பைக் காட்டும் விதமாக சப்தத்தை உயர்த்துதல், அல்லது பொறுமையிழப்பின் உச்சகட்டமாக, சட்டைகளைக் கிழித்துக்கொள்ளல்.