ஏதோ மேலிருந்து ஒரு பொருள் விழுந்தது போன்ற ஒரு பயங்கரமான சத்தத்தை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கேட்டார்கள். உடனே அவர்கள் அங்கிருந்த தோழர்களிடம் அந்த சப்தம் பற்றிக் கேட்டபோது, இது குறித்து அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள் என்று அவர்கள் பதிலளித்தனர். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவர்களிடம் ' நிச்சயமாக நீங்கள் செவிமடுத்த அந்த சப்பதம் என்னவென்றால்; எழுபது ஆண்டுகளுக்கு முன்பு நரகத்தின் விளிம்பிலிருந்து எறியப்பட்ட ஒரு கல், அது நரகத்தின் ஆழத்தை அடையும் வரை கீழ் நோக்கி சென்று கொண்டே இருந்தது, அது இப்போது நரகத்தின் அடியை சென்றடைந்தது விட்டது, அதன் சப்தத்தைத்தான் தற்போது நீங்கள் கேட்டீர்கள் என நபி ஸல்லல்லாஹ} அலைஹி வஸல்லம் குறிப்பிடுகிறார்கள்.