இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் யார் ஏகத்துவ வார்த்தையை மொழிந்து அதன் கருத்துக்களை அறிந்து அதன் அடிப்படையில் அமல் செய்து, முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அடிமையென்றும், அவரின் தூதுத்துவத்தை சான்று பகர்ந்து, ஈஸா (அலை) அவர்களையும் அவரின் தூதுத்துவத்தையும் ஏற்று, மேலும் அல்லாஹ் அவரை 'குன்'ஆகுக என்ற வார்த்தையின் மூலம் படைத்தான் என்றும் அவர் அல்லாஹ் படைத்த உயிர்களில் ஒன்று என ஏற்று, யூதர்கள் அவர்களின் தயார் குறித்து கூறிய தரங்கெட்ட வார்த்தையை விட்டும் அவர்களின் தாயார் தூய்மையானவர் என தூய்மைப்படுத்தி, சுவர்க்கம் மற்றும் நரகம் உண்மையானவை என விசுவாசித்து, அவைகளின் உள்ளமையை ஏற்றுக் கொண்டு அவை இரண்டும் அல்லாஹ்வின் வெகுமதியும் அவனின் தண்டனையும் என முழுமையாக நம்பி, அந்த நம்பிக்கையின் மீதே மரணித்துவிட்டால் அவர் செல்லுமிடம் சுவர்க்கமாகும். அவர் வணக்க வழிபாடுகளில் குறைவு செய்து, பாவங்கள் செய்திருந்தாலும் சரியே!