இங்கு நபியவர்கள் அறிவிப்பதாவது, சுவனத்தில் நுழையும் முதல் தரப்பினர், அங்கு நுழையும் போது பௌர்ணமி இரவின் சந்திரனைப் போன்று இருப்பர். பின்பு அவர்களுக்கு அடுத்து நுழைபவர்கள் வானத்தில் கடுமையாக ஒழி வீசக் கூடிய நட்சத்திரத்தின் தோற்றத்தில் இருப்பர். அவர்களுக்கு பரிபூரணத் தன்மைகள் இருக்கும். அதாவது, அவர்கள் சலம் கழிக்கவோ, மலம் கழிக்கவோ, உமிழவோ, மூக்கு சிந்தவோ மாட்டார்கள். அவர்களது சீப்புக்கள் தங்கமாகும். அவர்களது வியர்வை கஸ்தூரியாகும். அவர்கள் நறுமணப் புகை போடும் கலசங்களில் இருந்து, நல்ல, தூய்மையான நறுமணம் வீசும். அவர்களது மனைவியர் ஹூருல் ஈன்களாகும். அவர்கள் அனைவரும் ஒரே மனிதரின் தோற்றத்தில் இருப்பார்கள். (அதாவது) தமது தந்தையாகிய, ஆதமின் தோற்றத்திலும் உயரத்திலும் இருப்பார்கள். அவரது உடல் வானத்தில் அறுபது முழம் உயரத்தில் இருந்தது.