அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள்: தன் இரு தாடைகளுக்கிடையே உள்ள (நாவின் ) தீங்கையும், ஒருவனது இரு கால்களுக்கிடையே உள்ள (மறையுறுப்பின்) தீங்கையும் அல்லாஹ் பாதுகாத்து விட்டால் அவன் சொர்க்கத்தில் நுழைவான் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
ஸஹீஹானது-சரியானது - இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்
அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடிய விடயங்களை விட்டும், விபச்சாரத்தை விட்டும் அல்லாஹ் யாரை பாதுகாக்கிறானோ அவன் நரகை விட்டு தப்பி சுவர்க்கத்தில் நுழைந்து விடுகிறான்.