நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: 'யார் அல்லாஹ்வை இணைவைக்காத நிலையில் சந்திக்கிறாரோ அவர் சுவனம் நுழைவார். யார் அவனை இணைவைத்த நிலையில் சந்திக்கிறாரோ அவர் நரகில் நுழைவார்'. சரியானது - இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
explain-icon

விளக்கம்

' அல்லாஹ்விற்கு எதனையும் இணைவைக்காத நிலையில் மரணிப்பவர், அவரின் சில குற்றங்களுக்கு-பாவங்களுக்கு- தண்டனை வழங்கப்பட்டாலும் அவரின் இறுதி முடிவு சுவர்க்கமாகும். யார் அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைத்த நிலையில் மரணிக்கிறாறோ அவர் நரகத்தில் நிரந்தரமாக இருப்பார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • நரகில் நிரந்தரமாக தங்குவதை விட்டு தப்பிக்க காரணமாக அமையும், ஏகத்துவத்தின் சிறப்பு இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
  • சுவர்க்கம், நரகம் மனிதனுக்கு அருகிலேயே உள்ளன, அவனுக்கும் அவற்றுக்குமிடையில் மரணத்தைத் தவிர வேறு இடைவெளியில்லை.
  • ஷிர்க் குறைவானதாக இருந்தாலும், கூடுதலாக இருந்தாலும் அதிலிருந்து விலகி இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டிருத்தல். ஏனெனில் அவற்றிலிருந்து விலகியிப்பதே நரகிலிருந்து தப்பிப்பதற்கான வழியாகும்.
  • செயல்களில் இறுதியை வைத்தே இறுதி முடிவு கணிக்கப்படுகின்றது
explain-icon

மேலதிக விபரங்களுக்கு