உண்மையான வலிமை என்பது உடல் வலிமையோ, அல்லது பலசாலியை வீழ்த்துவதோ அல்ல. மாறாக மிகப்பெரும் பலசாலி என்பவன் கடுமையான கோபத்தின் போது தனது உள்ளத்துடன் போராடி கட்டுப்படுத்துபவனே என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லாம் அவர்கள் தெளிவு படுத்துகிறார்கள். ஏனெனில் இது தன்னைக் கட்டுப்படுத்தி அவனிடமுள்ள ஷைத்தானை வெற்றி கொள்ளும் அவனது ஆற்றலைப் பறைசாற்றுகின்றது.