இந்த ஹதீஸை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது இரட்சகனிடமிருந்து அறிவிக்கிறார்க்ள். ஒரு அடியான் ஒரு பாவத்தை செய்துவிட்டு பின்னர் யாஅல்லாஹ் எனது -குற்றத்தை –பாவத்தை எனக்கு மன்னித்தருள்வாயாக என்று கூற, அதற்கு அல்லாஹ் எனது அடியான் ஒரு பாவத்தை செய்துவிட்டு அவனது அப்பாவத்தை மன்னிக்க இறைவன் உள்ளான் என்பதை அறிந்துள்ளான். எனவே அவனுடைய பாவத்தை மன்னித்து அதனை மறைத்துவிடுகிறான். இவ்வாறான ஒரு நபருக்கு அல்லாஹ் நான் அவனை மன்னித்துவிட்டேன் என்று கூறுகிறான். மீண்டும் அந்த அடியான் பாவத்தை செய்துவிட்டு பின்னர் யாஅல்லாஹ் எனது -குற்றத்தை –பாவத்தை எனக்கு மன்னித்தருள்வாயாக என்று கூற அதற்கு அல்லாஹ் எனது அடியான் ஒரு பாவத்தை செய்துவிட்டு, அவனது அப்பாவத்தை மன்னிக்க இறைவன் உள்ளான் என்பதை அறிந்துள்ளான். எனவே அவனுடைய பாவத்தை மன்னித்து அதனை மறைத்துவிடுகிறான். இவ்வாறான ஒரு நபருக்கு அல்லாஹ் நான் அவனை மன்னித்துவிட்டேன் என்று கூறுகிறான். மீண்டும் மூன்றாவது தடவையாகவும் அந்த அடியான் பாவத்தை செய்துவிட்டு பின்னர் யாஅல்லாஹ் எனது -குற்றத்தை –பாவத்தை எனக்கு மன்னித்தருள்வாயாக என்று கூற அதற்கு அல்லாஹ் எனது அடியான் ஒரு பாவத்தை செய்துவிட்டு அவனது அப்பாவத்தை மன்னிக்க இறைவன் உள்ளான் என்பதை அறிந்துள்ளான். எனவே அவனுடைய பாவத்தை மன்னித்து அதனை மறைத்துவிடுகிறான். இவ்வாறான ஒரு நபருக்கு அல்லாஹ் நான் எனது அடியானை மன்னித்துவிட்டேன் என்பதாகக் கூறுகிறான். அந்த அடியான் பாவம் செய்துவிட்டு அதனை விட்விட்டுகிறான், பின்னர் அதற்காக வருந்தி மீண்டும் அப்பாவகாரியத்திற்கு செல்வதில்லை என்று மனஉறுதி கொள்கிறான். இவ்வாறு இருக்கையில் அவனின் மனம் அவனை ஆட்கொண்டு மீண்டு அப்பாவ காரியத்தில் வீழ்ந்து விடுகிறான். இப்படியிருக்கும் ஒரு அடியானை -அதாவது பாவம்செய்வதும் அதற்காக பாவமீட்சி கோருவதும் என்ற நிலையில் இருப்பவனை- அல்லாஹ் தான் மன்னித்து விடுவதாக கூறுகிறான். ஏனெனில் தவ்பாவானது முன் செய்தபாவங்களை அழித்துவிடுகிறது.