யூத, கிறிஸ்தவர்கள் அல்லாஹ்வின் சட்டத்திற்கு மாற்றமாக தமது மதகுருகள் உருவாக்கும் சட்டத்திற்குப் கட்டுப்படுவதன் மூலம் அம்மதகுருக்களைக் கடவுள்களாக எடுத்துக் கொண்டார்கள் என்ற செய்தியை உள்ளடக்கிய இறைவசனத்தை நபியவர்கள் ஓதும் போது செவிமடுத்த இந்த நபித்தோழருக்கு அதன் கருத்தில் குழப்பநிலை தோன்றியது, ஏனெனில் வணக்கம் என்பது சிரம்பணிவது போன்றன மாத்திரம் என அவர் விளங்கி வைத்திருந்தார். அல்லாஹ், ரஸூலின் சட்டத்திற்கு மாற்றமாக ஹலாலை ஹராமாக்குவதிலும், ஹராமை ஹலாலாக்குவதிலும் தமது மதகுருக்களுக்குக் கட்டுப்படுவதும் அவர்களை வணங்குவதுதான் என நபியவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.