அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆலு இம்ரான் ஸுறாவின் 7 வசனமான ' ஹுவல்லலதி அன்ஸல அலைக்கல் கிதாப..' என்ற வசனத்தை ஒதினார்கள் (கருத்து: அவன்தான் உம்மீது இவ்வேதத்தை இறக்கிவைத்தான் அதில் கருத்துத் தெளிவுள்ள)முஹ்கமாத் வசனங்களும் உள்ளன. அவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றும் சில (பல கருத்துக்களுக்கு இடம்பாடான) முதஷாபிஹாத்களாகும். எவர்களின் உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை நாடியும் இதன் தவறான விளக்கத்தை தேடியும் அதில் பலகருத்துக்களுக்கு இடம்பாடானவற்றை பின்பற்றுகின்றனர். அதன் யதார்த்தமான கருத்தை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்கள். அறிவில் தேர்ச்சி பெற்றவர்களோ 'நாங்கள் அவற்றை நம்பிக்கை கொண்டோம் அனைத்தும் எங்கள் இரட்சகனிடமிருந்துமுள்ளவையே என்று கூறுவார்கள் சிந்தனையுடையோரைத்தவிர மற்றவர்கள் நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.'(ஆலு இம்ரான் 7) இந்த வசனத்தில் அல்லாஹ் தனது நபிக்கு அல்குர்ஆனை இறக்கியதாகவும்,அதில் தெளிவான ஆதாரங்களும், எந்த மூடலுமில்லாத –சிக்கலுமில்லாத சட்டதிட்டங்களும் உள்ளதாகவும், இதுவே இவ்வேதத்தின் அடிப்படையாகவும் மூலாதாரமாகவும் சர்ச்சைகள் சிக்கல்களின் போது இதுவே மூலாதாரமாக இருக்கும் என்பதாகவும் அல்லாஹ் குறிப்பிடுகிறான். என்றாலும் பல கருத்துக்களைகொள்வதற் இடம்பாடான சில வசனங்கள் இவ்வேதத்தில் உண்டு. சிலர் அவ்வாறான வசனங்களின் கருத்துக்களை புரிந்து கொள்வதில் குழப்பத்தில் இருப்பர். இன்னும் சிலரோ குறிப்பிட்ட வசனத்திற்கும் ஏனைய வசனங்களுக்கும் மத்தியில் முரண்பாடு உள்ளதாக நினைப்பர். பின்னர் அல்லாஹ் இவ்வாறான இந்த வசனங்களில் மக்கள் நடந்து கொள்ளும் முறை பற்றி விவரிக்கிறான். உள்ளத்தில் கோளாறுடன் சத்தியத்தை விட்டு விலகி இருப்போர் தெளிவான வசனங்களைவிட்டுவிட்டு இவ்வாறு முதஷாபிஹான வசனங்களை பின்பற்றுவர் இதனூடாக சந்தேகங்களை ஏற்படுத்தி மக்களை வழிகெடுப்பதோடு தங்களின் மனோ இச்சைப்பிரகாரம் அதற்கு வியாக்கியானம் அளிப்பர். ஆனால் அறிவில் தேர்ச்சிபெற்றோர் முதஷாபிஹான வசனங்களை அறிந்திருப்பர் அவற்றை முஹ்கமான வசனங்களோடு ஒப்புநோக்கிபார்ப்பார்ப்பர். இது அல்லாஹ்விடமிருந்து வந்தவை என்பதை உறுதியாக விசுவாசிப்பர் ஆகையால் சிக்கலோ முரண்பாடோ இருக்காது என்பதை நம்புவதோடு இதிலிருந்து படிப்பினை பெருவர்.சீரிய அறிவு படைத்தோரைத் தவிர மற்றவர்கள் படிப்பினை பெற மாட்டார்கள். பின்னர் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவரகள் ஆஇஷா ரழியல்லாஹு அவர்களிடம் முதஷாபிஹான வசனங்களை பின்பற்றுவோரை நீங்கள் கண்டால் அவர்களையே அல்லாஹ் உள்ளத்தில் கோளாறு உள்ளோர் என்று பெயரிட்டுக் குறிப்பிட்டுள்ளான்.எனவே அவர்கள் குறித்து எச்சரிக்கையாக இருப்பதோடு அவர்களின் கூற்றுக்களுக்கு செவிசாய்த்திட வேண்டாம் எனவும் கூறினார்கள்.