நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மனைவி உம்முஸலமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் புதல்வர், உமர் இப்னு அபீ ஸலமா ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள். - அவர் நபியவர்களின் கண்காணிப்பு மற்றும் வளர்ப்பின் கீழ் இருந்தவர்- அவர் உணவு உண்ணும் போது தனது கையை உணவை எடுப்பதற்காக அங்குமிங்கும் நகர்த்திக்கொண்டிருந்தார் அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உண்ணும் போது கடைபிடிக்கவேண்டிய மூன்று ஒழுக்கங்களை கற்பித்துக்கொடுத்தார்கள் அவை பின்வருமாறு: முதலாவது : உண்ண ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹ் கூறுதல். இரண்டாவது: வலது கையால் உண்ணுதல். மூன்றாவது : உணவுத் தட்டில் தனக்கு அருகில் உள்ள பகுதியிலிருந்து சாப்பிடுதல்.