நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது வலக்கரத்தால் உண்ணட்டும்; பருகும் போது வலக்கரத்தால் பருகட்டும். ஏனெனில், ஷைத்தான் இடக்கரத்தால்தான் உண்கிறான்; இடக்கரத்தால்தான் பருகுகிறான்'. சரியானது - இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
explain-icon

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு முஸ்லிம் வலது கையால் உணவருந்துமாறும் பானங்களை அருந்துமாறும் கட்டளையிடுவதோடு, ஷைத்தான் இடது கையால் உண்ணுகிறான் மற்றும் குடிக்கிறான் என்பதனால் இடது கையால் சாப்பிடுதல் மற்றும் குடித்தலை தடுத்துள்ளார்கள்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • இடது கையால் உண்ணுவதாலும் பருகுவதாலும் ஷைத்தானுக்கு ஒப்பாக நடப்பதை தடுத்திருத்தல்.
explain-icon

மேலதிக விபரங்களுக்கு