அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஜரீர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'மனிதர்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான்'. சரியானது - இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
explain-icon

விளக்கம்

மனிதர்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். ஆகவே உயிருள்ள ஜீவராசிகளுக்கு இரக்கம் காட்டுவது அல்லாஹ்வின் அருளைப் பெற்றுக் கொள்வதற்கான மிகப்பெரும் வழியாக உள்ளது.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • அனைத்து உயிரினங்களுக்கும் இரக்கம்காட்ட வேண்டும் என்பது அவசியமாகும். என்றாலும் இங்கு மனிதர்களை விசேடமாக குறிப்பிட்டிருப்பது அவர்களில் அதி கரிசனை செலுத்த வேண்டும் என்பதற்காகும். அனைத்துப் படைப்பினங்களுக்கு இரக்கம் காட்டுவது அவசியமாகும், மக்கள் மீது அதிக கரிசனை எடுப்பதற்காகவே அவர்கள் குறித்துக் கூறப்பட்டுள்ளனர்.
  • அல்லாஹ் நிகரற்ற கருணையாளன். எனவே அவன் தனது அடியார்களில் கருணைகாட்டுவோருக்கு இரக்கம் காட்டுகிறான். எனவே செயலின் தன்மைக்கேட்ப அதே கூலி கிடைக்கிறது.
  • மனிதர்களுக்கு இரக்கம் காட்டுதல் என்பது அனைத்து நன்மையான விடயங்களை அவர்களுக்கு சேர்ப்பித்தல், தீங்குளை தடுத்தல் மற்றும் அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுதல் போன்ற விடயங்களை உள்ளடக்குகிறது.
explain-icon

மேலதிக விபரங்களுக்கு