ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிம் ஒருவரை ஏதாவதொரு விடயத்தில் குறையை மறைத்தால், அல்லாஹ் மறுமையில் அவரின் குறையை மறைப்பான். ஏனெனில், கூலியென்பது குறித்த செயலுக்க ஒப்பாகவே கிடைக்கும். அல்லாஹ் அவரை மறைப்பதென்பது, அவரது குறைகளையும், பாவங்களையும், மஹ்சரில் மக்கள் முன்னிலையில் பகிரங்கப்படுத்தாமல் மறைப்பதாகும். சிலவேளை, அவற்றை அவரிடமே கூறாமலோ, விசாரிக்காமலோ கூட இருக்கலாம்.