நரகமானது மனம் விரும்பும் ஹராமான காரியங்களை செய்வது, கடமைகளை புறக்கணித்து அதில் அலட்சியமாக இருப்பது போன்ற விடயங்களால் திரையிடப்பட்டுள்ளது என நபியவர்கள் இந்த ஹதீஸில் தெளிவு படுத்துகிறார்கள். இந்த விடயத்தில் யார் தனது மனோ இச்சையைப் பின்பற்றி நடந்து கொள்கிறாரோ அவர் நரகிற்கு உரித்தானவராக மாறிவிடுவார். மனம் விரும்பாத விடயங்கள் மூலம்தான் சுவர்க்கம் சூழப்பட்டுள்ளது. மனம் விரும்பாத விடயங்களில்: இறைக்கட்டளைகளை தொடராக பேணிவருதல், ஹராமான விடயங்களை விட்டுவிடுதல், இந்த விடயங்களில் ஏற்படும் சிரமங்களைத் தாங்கிக் கொள்ளல் போன்றவை இதில் உள்ளவையாகும். இந்த விடயங்களில் தீவிரமாக இருந்து தன்னை சிரமப்பட்டுக் காப்பாற்றிக் கொள்பவர் சுவர்க்கம் நுழைய தகுதி பெறுவார்.