இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா கூறுகிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வுழுவின் உறுப்புக்களை ஒவ்வெரு தடவையும் கழுவுபராக இருந்தார்கள். சரியானது - இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்
explain-icon

விளக்கம்

சில வேளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வுழு செய்தால் வுழுவின் உறுப்புக்களை ஒவ்வொரு தடவை கழுவக் கூடியவராக இருந்தார்கள். அதாவது முகம் வாய்க் கொப்பளித்தல், நாசுக்கு நீர் செலுத்துதல் உள்ளடங்களாக முகம், இருகைகள், மற்றும் இருகால்களை ஒவ்வொரு தடவை கழுவினார்கள். இதுவே கட்டாயம் கழுவவேண்டியதன் அளவாகும்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • வுழுவின் உறுப்புகளை ஒவ்வொரு தடவை கழுவுவதே கடமையாகும்-வாஜிபாகும் அதற்கு மேலதிகமாக -இரு முறை, பல முறை- கழுவுவது முஸ்தஹப்பாகும்.
  • சில வேளைகளில் ஒவ்வொரு முறை வுழுவின் உறுப்புகளை கழுவி வுழு செய்வது மார்க்கத்தில் அங்கீகரிக்கப்பட்ட விடயமாகும்.
  • தலையில் ஒரு தடவை மஸ்ஹு -ஈரக்கைகளால் தடவுதல்- செய்தல் ஷரீஆவின் வழிகாட்டலாகும்.
explain-icon

மேலதிக விபரங்களுக்கு