நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு ஸாஅ' முதல் ஐந்து முத் வரையிலான தண்ணீரைக் கொண்டு ஜனாபத்திலிருந்து தூய்மைபெற பயன்படுத்துபவர்களாக இருந்தார்கள். அதே வேளை அவர்கள் ஒரு முத் தண்ணீரைக் கொண்டு வுழுச் செய்வார்கள். ஒரு ஸாஃ' என்பது நான்கு முத் ஆகும். ஒரு முத் என்பது சராசரி உடல் எடை கொண்ட ஒருவரின் இரண்டு உள்ளங்கைகளின் அளவாகும்.