ஆதமின் சந்ததிகளில் மூன்று நபர்களைத் தவிர மற்ற அனைரும் பொறுப்பு வழங்கப்பட்டவர்கள், அவர்களின் கடமைகளை நிறைவேற்றுவது அவசியம் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அந்த மூன்று நபர்களும் பின்வருமாறு : ஒரு குழந்தை வளர்ந்து பருவமடையும் வரை. புத்திசுவாதினமற்றவர்; அவரின் புத்தி தெளியும் வரை. தூங்குபவர் விழித்தெழும் வரை இந்த மூன்று பிரிவினரும் மார்க்கரீதியான கடமையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். அவர்கள் தீமை செய்தால், அது அவர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்படாது. ஆனால் ஒரு சிறு குழந்தை நன்மை செய்தால் அது பதிவு செய்யப்படுகிறது. ஆனால் ஒரு புத்திசுவாதீனமற்றவர் அல்லது தூங்கும் நபரின் நன்மை பதிவு செய்யப்படுவதில்லை. அவர்கள் உணர்வு நிலையில் இல்லாததால் அவர்களின் வழிபாடு செல்லுபடியாகாது.