இங்கு நபியவர்கள் ஒரே ஒரு ஆடையில் தொழுபவர், தனது தோள் புயங்கள் மேல் எதையும் வைத்து மறைக்காமல் தொழுவதை தடுக்கின்றார்கள். ஏனெனில் இரு தோள் புயங்களும் அவ்றத்தாக இல்லாவிட்டாலும், அவ்விரண்டையும் மறைப்பதுவே அவ்ரத்தை மறைப்பதை முழுமைப்படுத்தும். தொழுகையில் அல்லாஹ்வுக்கு முன்னிலையில் நிற்கும் போது இவ்வாறு மறைத்திருப்பது அவனை கண்ணியப் படுத்தும், மகத்துவப்படுத்தும் ஒரு அடையாளம் ஆகும்.