அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'உணவு சாப்பிடுவதற்கு தயார் நிலையில் இருக்கும் போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக் கொண்டும் தொழக்கூடாது'.
சரியானது - இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
உணவு சாப்பிடுவதற்கு தயாரான நிலையில்; தொழுபவர் மனது ஏங்கிக்கொண்டு உணவு பற்றிய சிந்தனையுடன் தொழுவதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அவைலஹிஸ்ஸலாம் அவர்கள் தடுத்தார்கள்.
அதே போல் மலசலத்தை அடக்கிக்கொண்டு அதன் சிந்தனையில் தொழுவதையும் தடுத்தார்கள்.
ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்
தொழுவதற்கு முன் தொழுகையின் ஈடுபாட்டை, கவனத்தை சிதறடிக்கும் அனைத்தையும் தூரப்படுத்துவது அவசியமாகும்.