மறுமை நாளில் நபியவர்களுக்கென ஒரு தடாகம் உள்ளதாகவும் அதன் நீளமும் அகலமும் ஒரு மாதகால பிரயாணம் செய்யும் தூரத்துக்கு நிகரானது என இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள் அதன் நீரானது பாலைவிட வெண்மையானது. அதன் சுகந்தமோ கஸ்தூரியை விட அதிகமானது. அதில் வைக்கப்ப்ட்டுள்ள கூசாக்களின் எண்ணிக்கை வானத்தில் உள்ள நட்சத்திரங்களின் அளவுக்கு மிக அதிகமானவை . இந்த தடகத்தில் அந்த கூசாக்களின் மூலம் நீர் அருந்தியோருக்கு தாகமென்பது ஒரு போதும் ஏற்படாது.