நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மூஸா அல்அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : 'நிச்சயமாக அல்லாஹ் அநியாக்காரனுக்கு அவகாசம் வழங்கிக்கொண்டிருப்பான், ஆனால் அவனை தண்டிக்க ஆரம்பித்துவிட்டால் அவனை விடவும் மாட்டான்' என்று நபியவர்கள் கூறிவிட்டு, ஸூறா ஹூதின் 102 ம்; வசனத்தை ஒதினார்கள். ''மேலும் அக்கிரமம் புரிந்து கொண்டிருக்கக் கூடிய கிராமங்களை உம் இரட்சகன்; தண்டிக்கும் போது அவனது தண்டனை இப்படித்தான் இருக்கும். நிச்சயமாக அவனது பிடி –தண்டனை- வேதனை மிக்கதாகவும்; மிகக் கடினாமானதாகவும் இருக்கும்'' சரியானது - இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
explain-icon

விளக்கம்

இணைவைப்பு மற்றும் பாவகாரியங்கள் ஆகியவற்றின் மூலம் அநியாயத்தில் ஈடுபட்டு அத்துமீறி நடப்பதையும், மக்களின் உரிமைகளில் அக்கிரமம் செய்து நடப்பதையும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இந்த ஹதீஸில் எச்சரிக்கிறார்கள். என்றாலும் இவ்வாறான ஒருவருக்கு அல்லாஹ் அவகாசமளித்து தண்டனை வழங்குவதைப் பிற்படுத்தி அவசரமாக தண்டிக்காது ஆயுளையும் நீடித்து வைக்கிறான். இவ்வாறான நிலையில் இருந்து தனது அக்கிரமங்களுக்கு தௌபா –பாவமீட்சி – கோராது இருந்தால் அவனை அவனது அக்கிரமத்திலும் அநியாயத்திலும் தொடர்ந்தும் இருக்கா வண்ணம் தண்டிப்பதுடன்; ஒரு போதும் அவனை விட்டுவிடமாட்டான். பின்னர் ஸூறா ஹூதின் 102 ம்; வசனத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒதினார்கள் ''மேலும் அக்கிரமம் புரிந்து கொண்டிருக்கக் கூடிய கிராமங்களை உம் இரட்சகன்; தண்டிக்கும் போது அவனது தண்டனை இப்படித்தான் இருக்கும். நிச்சயமாக அவனது பிடி –தண்டனை- வேதனை மிக்கதாகவும்; மிகக் கடினாமானதாகவும் இருக்கும்''.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • அக்கிரமத்தில் ஈடுபடும் புத்தியுள்ள ஒருவன் தன்னை திருத்திக்கொள்வதற்கு தௌபாவின் -பாவமீட்சியின்- பக்கம் விரைய வேண்டும். ஏனெனில் அக்கிரமம் செய்பவன் தனது அக்கிரமத்தில் தொடர்ந்தும் இருக்கையில் அல்லாஹ்வின் சூழ்ச்சியில்-தண்டனையில்- ஒரு போதும் அச்சமற்றிருக்க முடியாது. அது எப்போது நிகழும் என்பதை அவனால் எதிரபார்க்க முடியாது .
  • அநியாயக்காரர்களுக்கு அவகாசம் அளித்து, அவர்களை அவசரமாக தண்டிக்காது இருப்பது, அவர்கள் அறியாத விதத்தில் கட்டம் கட்டமாக தண்டிப்பதற்கும் அவர்களின்; பாவத்தை உணர்ந்து தௌபா செய்யவில்லையெனில், அதற்கான தண்டனையையும் பன்மடங்காக்குவதற்குமாகும்.
  • அநியாயம் சமூகங்கள் தண்டிக்கப்படுவதற்கான காரணிகளில் ஒன்றாகும்.
  • அல்லாஹ் அநியாயத்தின் காரணமாக ஒரு கிராமத்தை அழித்திருப்பான், அதில் நல்லோர்களும் இருந்திருப்பர். ஆனால் அவர்கள் மரணிக்கும் போது எந்த நிலமையில் இருந்தார்களோ அதே நிலமையில் மறுமையில் எழுப்பாட்டப்படுவரார்கள் அந்த தண்டனை அவர்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
explain-icon

மேலதிக விபரங்களுக்கு