இணைவைப்பு மற்றும் பாவகாரியங்கள் ஆகியவற்றின் மூலம் அநியாயத்தில் ஈடுபட்டு அத்துமீறி நடப்பதையும், மக்களின் உரிமைகளில் அக்கிரமம் செய்து நடப்பதையும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இந்த ஹதீஸில் எச்சரிக்கிறார்கள். என்றாலும் இவ்வாறான ஒருவருக்கு அல்லாஹ் அவகாசமளித்து தண்டனை வழங்குவதைப் பிற்படுத்தி அவசரமாக தண்டிக்காது ஆயுளையும் நீடித்து வைக்கிறான். இவ்வாறான நிலையில் இருந்து தனது அக்கிரமங்களுக்கு தௌபா –பாவமீட்சி – கோராது இருந்தால் அவனை அவனது அக்கிரமத்திலும் அநியாயத்திலும் தொடர்ந்தும் இருக்கா வண்ணம் தண்டிப்பதுடன்; ஒரு போதும் அவனை விட்டுவிடமாட்டான். பின்னர் ஸூறா ஹூதின் 102 ம்; வசனத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒதினார்கள் ''மேலும் அக்கிரமம் புரிந்து கொண்டிருக்கக் கூடிய கிராமங்களை உம் இரட்சகன்; தண்டிக்கும் போது அவனது தண்டனை இப்படித்தான் இருக்கும். நிச்சயமாக அவனது பிடி –தண்டனை- வேதனை மிக்கதாகவும்; மிகக் கடினாமானதாகவும் இருக்கும்''.