ஒரு விசுவாசிக்கு தனது உயிர், பொருளில் சிலவேளை சோதனைகள் ஏற்படலாம், அதன்போது பொறுமையாக இருந்தால் அதற்காக அல்லாஹ் அவருக்குக் கூலி வழங்குவதாகவும், சோதனையின் பரவல், வீரியத்திற்கு ஏற்ப அதன் கூலியும் விருத்தியடையுமென நபியவர்கள் கூறுகின்றார்கள். மேலும் சோதனைகள் விசுவாசியுடனான அல்லாஹ்வின் நேசத்தினுடைய அடையாளமாகும். அல்லாஹ் நிர்ணயித்த விதி எப்படியும் நிகழ்ந்தே தீரும், இருப்பினும் பொறுமையாக இருந்து, அதனைப் பொருந்திக் கொண்டால் அவனைப் பொருந்திக் கொள்வதன் மூலம் கூலி வழங்குகின்றான். கூலியால் அவ்விசுவாசிக்கு இதுவே போதுமாகும். அவன் கோபப்பட்டு, அச்சோதனையை வெறுத்தால் அல்லாஹ்வும் அவனுடன் பகைக்கின்றான், தண்டனையால் இதுவே அவனுக்குப் போதுமாகும்.