நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒவ்வொரு விடயமும் இறைவிதியின் அடிப்படையில் நிகழ்கிறது என்பதை தெளிவுபடுத்துகிறார்கள். இயலாமை 'அஜ்ஸ்' என்பது இம்மை மறுமை விவகாரங்களில் கட்டாயம் செய்யவேண்டியவற்றை விட்டுவிடுவது,எதிர்காலத்தில் செய்யவென குறித்த நேரத்தில் செய்வதைவிட்டுப் தாமதப்படுத்துதல். 'கைஸ்' (புத்திசாலித்தனம்) என்பது இம்மை மறுமை விடயங்களில் புத்திசாதுரியத்துடன் சுறுசுறுப்பாக ஈடுபடுதலைக் குறிக்கும். அல்லாஹ் இயலாமை மற்றும் புத்திசாலித்தனம் மற்றும் அனைத்து விடயங்களையும் நிர்ணயித்துள்ளான்.அவை அனைத்தும் அவனின் பூரண அறிவு மற்றும் நாட்டத்துடனேயே இவ்வுலகில் நிகழ்கிறது.