பிரயாணம், சுற்றுலா போன்ற சந்தர்ப்பங்களில் ஓரிடத்தில் தங்க நேரிடும் போது மனிதனுக்கு இயல்பாக ஏற்படும் அச்சம், பாதுகாப்பற்ற உணர்வு போன்றவற்றிலிருந்து பாதுகாப்புத் தேடுமாறு நபியவர்கள் தனது சமூகத்திற்கு வழிகாட்டுகின்றார்கள். அதாவது சிறப்பிலும் பரகத்திலும் பயனளிப்பதிலும் அருள் பொதிந்த, அனைத்து குறைகளை விட்டும் தூய்மையான, நிறைவான அல்லாஹ்வின் வார்த்தை மூலம் தான் தங்கியிருக்கும் காலமெல்லாம் அவ்விடத்தில் தீங்கிழைக்கும் அனைத்தையும் விட்டு அபயத்தைத் தருமாறு பாதுகாப்புத் தேடுமாறு இதில் வழிகாட்டியுள்ளார்கள்.