ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: இரு ஸஜ்தாக்களுக்கிடையில் -மத்தியில் 'ரப்பிஃபிர்லீ, ரப்பிஃபிர்லீ,' என கூறுபவர்களாக நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இருந்தார்கள். (பொருள் : எனது இரட்சகனே! எனக்கு மன்னிப்பளிப்பாயாக, எனது இரட்சகனே! எனக்கு மன்னிப்பளிப்பாயாக). சரியானது - இமாம்களான அபூதாவுத், நஸாஈ, இப்னு மாஜா மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது
explain-icon

விளக்கம்

நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரு ஸஜ்தாக்களுக்கிடையில் -மத்தியில் 'ரப்பிஃபிர்லீ, என்ற இஸ்திஃபாரை மீண்டும் மீண்டும் கூறுபவர்களாக இருந்தார்கள். 'ரப்பிஃபிர்லீ, என்பது : அடியான் தனது இரட்சகனிடம் தனது பாவத்தை அழித்து விடுமாறும் குறைகளை மன்னித்து விடுமாறும் இறைஞ்சுவதைக் குறிக்கும்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • இந்த துஆவை பர்ழ் மற்றும் நபிலான தொழுகையில் இரு ஸஜ்தாவுக்கு மத்தியில் ஓதுவது மார்க்க வழிகாட்டலாகும்.
  • 'ரப்பிஃபிர்லீ, என்ற வார்த்தை இரு தடவைகள் கூறுவது முஸ்தஹப்பாகும். அதனை ஓரு தடவை மாத்திரம் கூறுவது கட்டாயமாகும்.
explain-icon

மேலதிக விபரங்களுக்கு