அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகவும் தாராள மனப்பான்மை கொண்டவர், மேலும் ரமளான் மாதத்தில் அவரது தாராள மனப்பான்மை இன்னும் அதிகமாக இருந்தது. அவர் வேண்டியவர்களுக்கு தாராளமாக கொடுப்பார். இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன: 1- ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சந்தித்தமை. 2- குர்ஆனை மீட்டுவது, அதாவது அல் குர்ஆனை மனப்பாடத்தில் ஓதுவதை மறுபரீசீலனை செய்வது. அல்குர்ஆனில் அந்நேரம் வரை இறக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளையும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஓதியோடு அதனை நபியவர்களுடன் மறுபரிசீலனை செய்தார்கள். இந்த நேரத்தில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் மழையுடனும் கருணையுடனும் அனுப்பும் இனிமையான காற்றை விட, மக்களுக்கு மிகவும் தாராளமாகவும், கனிவாகவும், வாரி வழங்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.