'யார் ஒருவர் அறப்போரில் கலந்து கொள்ளும் ஒருவருக்கு பயணம் மற்றும் போருக்கு மிகவும் தேவையான ஆயுதம், வாகனம், உணவு, செலவு போன்ற ஏனைய விடயங்களை பொறுப்பேற்று அவற்றை ஒழுங்கு செய்து தயார்படுத்திக் கொடுக்கிறாரோ அவரும் ஒரு போராளியின் அந்தஸ்த்தில் இருக்கிறார் அவருக்கும் போரில் கலந்து கொள்ளும் போராளியின் அதே கூலி கிடைக்கும் என்று நபியவர்கள் கூறினார்கள். அறப்போரில் கலந்து கொள்ளச்சென்ற ஒருவரின் விவகாரத்தை பொறுப்பேற்று அவரின் குடும்ப விவகாரங்களை கவனித்து வருபவரும் அறப்போராளியின் அந்தஸ்த்தைப் பெற்றவராக இருக்கிறார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்.