இங்கு நபியவர்கள் அபூ ஸஈத் (ரலி) அவர்களிடம், யார் அல்லாஹ்வை ஈமான் கொண்டு, அவனை ரப்பாகவும், ஆட்சியாளானகவும், தலைவனாகவும், அதிகாரம் மிக்கவனாகவும் பொருந்திக் கொண்டு, இஸ்லாத்தின் ஏவல், விலக்கல்களுக்கு முழுவதுமாகக் கட்டுப்பட்டு அதனை மார்க்கமாகப் பொருந்திக் கொண்டு, நபியவர்களுக்கு வழங்கப்பட்ட, அவர்கள் எத்திவைத்த அனைத்துடனும் அவர்களை நபியாகவும் பொருந்திக் கொள்கின்றாரோ, அவருக்கு சுவனம் நிச்சயம் என்று கூறுகின்றார்கள். ஆச்சரியப்பட்ட அபூ ஸஈத் அவர்கள், "அதை எனக்கு மீண்டும் கூறுங்கள்" என்று கேட்டார்கள். நபியவர்கள் மீண்டும் கூறிவிட்டு மேலும் இவ்வாறு கூறினார்கள் : "என்னிடம் இன்னுமொறு விடயமும் உள்ளது, அதைக் கொண்டு ஓர் அடியான் சுவனத்தில் நூறு படித்தரங்கள் உயர்த்தப்படுவான். ஒவ்வொரு படித்தரத்துக்கும் இடையில் வானம் பூமிக்கு இடையில் உள்ள அளவு இடைவெளி இருக்கும்" அப்போது அபூ ஸஈத் அவர்கள், 'அது என்ன அல்லாஹ்வின் தூதரே!' எனக்கேட்ட போது, "அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது; அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது" என்று கூறினார்கள்.